பணம் பத்தும் செய்யும்...
நண்பர்களே, நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே உங்களை நிம்மதியாக வாழ வைக்கும். பிறர் உழைப்பில் வந்த பணம், உங்களுக்கு நிம்மதி தராது.
ஏனென்றால், ஒவ்வொரு பணத்திலும் ஒருவரின் உழைப்பு, கர்மா, பாவ, புண்ணியம் அடங்கியுள்ளது. பெற்றோர்களே ஆனாலும், அவர்களின் பாவ புண்ணியம் அவர்களால் நமக்குத் தரப்படும் பணத்திலும், சொத்திலும் அடங்கும்.
அதை நாம் அனுபவிக்கும் போது, அவர்களின் கர்மபலன், நம்மையும் நமது வம்சத்தையும் வந்தடையும்.
பெற்றோர்கள், வாழும் வரை அவர்களின் சொத்தைப் பிரித்து வாங்காதீர்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்கள் சொத்துக்களைத் தந்த பிறகு, ஏதோ ஒரு சூழல் காரணமாக உங்கள் மூலம் அவர்கள் ஏதாவது மன வருத்தம் அடைய நேரிட்டால், அவர்கள் மனதில் தோன்றும் ஒரே விஷயம் "நாம் ஏமாந்து விட்டோம், நம் குழந்தை நம்மை ஏமாற்றி விட்டது, அவசரப்பட்டு சொத்துக்களை தந்தது தவறு" என்பதே அது.
அந்த நிலையில் உங்களுக்கு, அவர்களிடம் இருந்து கிடைக்கப்போவது ஆசிர்வாதம் அல்ல, சாபமே😟. அதனால் உங்களுக்கு பாவச் சுமையே கர்மபலனாக கிடைக்கும். அது உங்களுடைய வாழ்வையும் வம்சத்தையும் பாதிக்கும். உங்கள் மனச்சாட்சி மூலம் நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடலாம்.
எனவே உங்கள் பெற்றோர் சொத்துக்களை தவிர்த்து உங்கள் சுய சம்பாத்தியத்தின் சொத்துக்களை மட்டுமே அனுபவிக்க முயலுங்கள். ஒரு வேளை பெற்றோர்களின் சொத்துக்களைப் பெற நேர்ந்தால், அவர்களின் இறப்பிற்குப் பிறகு (மட்டுமே) சமமாக பெற முயற்சி செய்யுங்கள்.அப்படி செய்தால், நிம்மதி இருக்கும். இல்லையேல், உங்கள் நிம்மதி தொலைந்து வேதனை நிறைந்த வாழ்க்கை வாழ வாய்ப்பு உள்ளது.
பெற்றோர்களே, நீங்களும் வாழும் வரை உங்கள் சொத்துக்களை உங்கள் பிள்ளைகளுக்கு தானம் செய்து விட வேண்டாம். ஏதோ ஒரு சூழல் காரணமாக உங்கள் பிள்ளைகளின் நல்ல செயல் கூட உங்களுக்கு தவறாக தோன்றி விட்டால் அல்லது அவர்களால் உங்களை திருப்திப்படுத்த முடியாமல் போனால், உங்கள் அந்திம காலம் நரகமாக மாறிவிடலாம். மேலும் உங்கள் மன வேதனை, அவர்களுக்கு சாபமாக மாறலாம்...
ஏனெனில் பணத்தின் முன், பந்தம், பாசம், உறவு, அன்பு அனைத்தும் அழிந்து போகும் கலியுகம் இது.
பெற்றோர்களும் நம் பிள்ளை தானே என்று நினைப்பதில்லை, பிள்ளைகளும் நம் பெற்றோர்கள் தானே என்று நினைப்பது இல்லை. இருவரின் அன்பு மற்றும் பாசத்தை, பாசத்தின் உறவின் அளவை பணமே தீர்மானிக்கிறது.
பணப் பிரதான உலகம். 😏😏😏
ஒரு நண்பரின் புலம்பல் இந்த பதிவு.
(அவரது பெற்றோர், அவருக்கு சொத்துக்களை வழங்கிய பிறகு, அந்த நண்பர் செய்த ஒரு செயல், அவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அவரிடமே, "நான் ஏமாந்து விட்டேன்" என்று முகத்தில் அடித்தால் போல் சொல்லி விட்டனர். சிறிது காலத்தில் இறந்தும் விட்டனர். இப்போது அந்த நண்பர் தனது நிம்மதியைத் தொலைத்து நரக வேதனையை அனுபவிக்கிறார்).
#அன்பு #பணம் #money #parents

No comments:
Post a Comment